திருக்குறள்

1213.

நனவினான் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.

திருக்குறள் 1213

நனவினான் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.

பொருள்:

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

மு.வரததாசனார் உரை:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

சாலமன் பாப்பையா உரை:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.